Sunday 19 December 2021

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை ஏமாற்றிவிட்டார்கள்.

இதை கண்டிப்பா நீங்கள் படிக்கவும்

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களை ஏமாற்றிவிட்டார்கள்:-
 
மராட்டியத்தில் 1955ல் ஒரு கூட்டத்தை கூட்டுகிறார் பாபாசாகேப். அந்த கூட்டத்தில் 5 லட்சம் பேர் பாமர மக்கள் கலந்து கொண்டார்கள். படித்த அரசு ஊழியர்களோ அதில் சொற்பமான பேரே கலந்து கொண்டனர். 

#அப்பொழுது அங்கு வந்திருந்த மக்களிடம் நிருபர்கள் கேட்டார்கள்:- 

''எதற்காக இங்கு வந்திருக்கிறீர்கள்?'' என்று. அதற்கு அவர்கள், ''எங்கள் கடவுளை பார்க்க வந்திருக்கிறோம்'' என்றார்கள். 

''அம்பேத்கர் கடவுளுன்னா, அவரிடம் என்ன கேட்க வந்திருக்கிறீர்கள்?'' என்றதும், ''நாங்க கடவுளிடம் என்ன கேட்பது? எங்க கடவுளுக்கு தெரியும், எங்களுக்கு என்ன தேவையென்று, அவர் எங்களுக்கு கொடுப்பார்''. 

சிலரோ, ''எங்கள் கடவுள் இனிமேல் எங்களுக்கு எதுவும் கொடுக்க வேண்டியதில்லை. அடிமையாக இருந்த எங்களுக்கு தன்மானத்தையும், சுயமரியாதையையும் ஏற்படுத்தி தந்தார். அதுவே போதும்'' என்றார்கள்.

அதைப்போல் அங்கு வந்திருந்த அரசு ஊழியர்களிடம், ''நீங்கள் என்ன காரணத்திற்காக வந்திருக்கிறீர்கள்?'' என்பதாக கேட்டார்கள். அதற்கு அவர்கள், ''10 வருஷமா கிளர்க்காகவே இருக்கேன். புரமோசனே வரலை'',

''ஒரு சின்ன தப்பால சஸ்பெண்ட் ஆயிட்டேன். அதான் அய்யாவை பார்க்க.....''

''அய்யாவின் புண்ணியத்தில் நான் வங்கி மேலாளர். இப்ப என் மகனும் படிச்சிட்டான். அவனுக்கும் வேலை ஏற்பாடு செய்யனும் ஆக படித்த அரசு ஊழியர்கள் தங்களின் நலத்திலும் தங்களின் குடும்ப நலத்தில் மட்டுமே முக்கியம் படுத்தியே பாபாசாகேப் பிடம் கோரிக்கை வைத்தார்கள்....'' 

இப்படியாக தங்கள் சுயநல அஜெண்டாவுடன் வந்திருந்தார்கள். இதையெல்லாம் கவனித்த பாபாசாகேப், ''நான் இந்த பாமர மக்களுக்காக எதுவும் செய்யலை. இன்னிக்கும் அடுத்தவர் நிலங்களில் கூலி வேலைதான் செய்திட்டிருக்காங்க. அவர்கள் 5   லட்சம் பேர் என்னை   பார்க்க வந்தார்கள். 

#ஆனால் என் 40 வருட போராட்டத்தில், மொத்த லாபமெல்லாம் கிடைச்ச இந்த அரசு ஊழியர்கள் வெறும் 250 பேர்தான், அதுவும் சொந்தநலனுக்காக வந்திருக்காங்க''. யாருக்காக உழைத்தனோ அந்த அரசு ஊழியர்கள் என் முதுகில் குத்திவிட்டார்கள் என்று வேதனையோடு பதிவு செய்தார் பாபாசாகேப் அவர்கள்.!''' 

என் படிப்பின் பலனை அனுபவித்தவர்கள் அனைவரும் படித்தவர்கள். தான் இவர்கள் படித்து முடித்தும் தன் சமுகத்தை வழிநடத்துவார்கள். என்று  நினைத்தேன் இவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்.மாறாக அவர்கள் #வயிற்றை நிரப்பிக்கொள்ள தான் என்னை சுற்றி சுற்றி வந்தார்கள். என்று என் கடைசி காலத்தில் உனர்ந்தேன். என்றார் ---பாபாசாகேப்அம்பேத்கர்.

"அன்றும் இன்றும் இதுதான் நடக்கின்றது. #அரசு ஊழியர்கள் தம் சமுகத்திற்க்காக உண்மையாக யாரும்  உழைக்க வில்லை உதவும் வழிநடத்தவும் இல்லை "

ஜெய்பீம்...

No comments:

Post a Comment

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள் அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்க...