Tuesday 22 May 2018

பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால் ஜெயிக்கலாம்.!!

படித்ததில் பிடித்தது..

ஒரு மிகப்பெரிய அரசருக்கு அவருடைய எல்லா பற்களும் விழுந்து பொக்கை வாயுடன் இருப்பதாக ஒரு கனவு வந்தது.

காலையில் பீதியுடன் எழுந்த அரசர் அந்தக் கனவால் என்ன விளைவுகள் நேருமோ என்று பயந்துபோய் முதல் வேலையாக ஒரு நாடி ஜோதிடரை வரவழைத்தார். அந்த நாடி ஜோதிடர் தனது ஓலைச்சுவடியை எடுத்து, அதில் பொக்கை வாய் கனவு பற்றி விளக்கியிருந்த ஒரு ஓலையை வாசித்துவிட்டு, "அரசே ! உங்கள் மனைவி, குழந்தைகள், சொந்த பந்தங்கள் எல்லாம் உங்களுக்கு முன்பே இறந்து விடுவார்கள் " என்று பலன் சொன்னார். உடனே அந்த அரசர் மிகவும் கோபமுற்று, "இவரைப் பிடித்து சிறையில் தள்ளுங்கள்!"என்று உத்தரவிட்டார்.

அதன் பிறகும் மன்னரின் மனம் சமாதானம் அடையவில்லை. இன்னொரு நாடி  ஜோதிடரை வரவழைத்து, அவரிடம் தன் பொக்கை வாய் கனவின் அர்த்தம் என்ன என்று வினவினார்.

அந்த ஜோதிடரும் அதே மாதிரியான ஓலைச்சுவடியைத்தான் வைத்திருந்தார். அவரும் அதைப் பார்த்துவிட்டு, "மன்னா! உங்கள் சொந்த, பந்தங்களையெல்லாம் விட நீங்கள் நீண்ட காலம் நீடூடி வாழ்வீர்கள்" என்று பலன் கூறினார். இதனால் மனம் குளிர்ந்த அரசர், அந்த ஜோதிடருக்கு தகுந்த பரிசுகள் வழங்கி அனுப்பி வைத்தார்.

இருவரும் அதே ஓலையைத்தான் படித்தார்கள், அதே விஷயத்தைதான் சொன்னார்கள்.

ஒருவர் எல்லோரும் இறந்துவிடுவார்கள் என்றார், இன்னொருவர் எல்லோரையும் கடந்து வாழ்வீர்கள் என்றார். அவ்வளவுதான் வித்தியாசம் !

பேசும் வார்த்தைகளை கவனமுடன் உபயோகித்தால்  ஜெயிக்கலாம்.!!

நாம் பேசும் வார்த்தைகள் மற்றவரை சந்தோஷப்படுத்த வேண்டுமே தவிர எந்தவித மனகசப்பையும் ஏற்படாமல் பார்த்துக் கொள்வோம் !

Thursday 17 May 2018

இதுவும் கடந்து போகும்..!!!

இதுவும் கடந்து போகும்..!!!

நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.

எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.

வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறதல்லவா?

வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?

எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?

வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?

இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும் அமைதி சாதாரணமானதல்ல. அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.

வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். கர்வம் தலை தூக்காது.

தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சோர்ந்து விட மாட்டீர்கள்.

நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை கௌரவிப்பீர்கள். அவர்கள் விலகும் போது பெரிதாக பாதிக்கப்படாமல் இருப்பீர்கள்.

தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் பொறுமை வரக் காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.

நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்.

நினைவில் கொள்ளும் அவசியமே இல்லாமல் வாழ்க்கையின் ஜீவநாதமாக அந்த உண்மை உங்கள் இதய ஆழத்தில் பதிந்து போய் விட்டால் அந்தப் புன்னகை நிரந்தரமாக உங்கள் முகத்தில் தங்கி விடுவதை மற்றவர்கள் காண்பார்கள்.



படித்ததில் உணர்ந்தது!

மன்னிப்பைப் பற்றி மருத்துவம் சொல்வது பகீர் தகவலாக உள்ளது.

மன்னிப்பைப் பற்றி
மருத்துவம் சொல்வது
பகீர் தகவலாக உள்ளது.

'நீங்கள் ஒரு நபர் மீது எரிச்சலும், கோபமும் கொள்ளும்போது உங்கள் மூளையில் ஒரு வடிவம் உருவாகிறது.

உங்கள் எரிச்சலும், கோபமும் அதிகரிக்க அதிகரிக்க அந்த வடிவம் ரொம்ப வலுவாக மாறிவிடுகிறது.

அந்த வலுவான நிலைமை பின்னர் உங்கள் இயல்பாகவே மாறிப் போகிறது.

அதன் பின் கோபமும், எரிச்சலும் இல்லாமல் வாழ்வது உங்களுக்கு குதிரைக் கொம்பாகி விடும்' என்கின்றன மருத்துவ ஆராய்ச்சிகள்.

'மன்னிக்கும் பழக்கமுடைய மனிதர்கள் ஆனந்தமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறார்கள்' என்கின்றன பல்வேறு ஆராய்ச்சி முடிவுகள்.

'கேம்பைன் பார் பர்கிவ்னஸ் ரிசர்ச்' சுமார் 48 ஆராய்ச்சிகளின் முடிவை விலாவரியாக எடுத்துரைக்கிறது. எல்லா ஆராய்ச்சிகளுமே மன்னிக்கும் மனிதர்கள் உடலிலும், உள்ளத்திலும் ஆரோக்கியமாகவும் ஆனந்தமாகவும் இருப்பதாக அடித்துச் சொல்கின்றன.

ஸ்டான்போர்ட் பல்கலைக் கழக பேராசிரியர் தனது 'லேர்ன் டு பர்கிவ்' (மன்னிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்) எனும் நூலில் மன்னிப்பின் மகத்துவத்தையும், அது தரும் ஆரோக்கியமான வாழ்க்கையையும் பற்றி பிரமிப்பூட்டும் வகையில் எழுதியிருக்கிறார்.

மன்னிப்பவர்களுக்கு புற்றுநோய் வரும் வாய்ப்பும் குறைவு என்கின்றன ஏல் மெடிக்கல் பல்கலைக்கழக ஆய்வுக் கட்டுரைகள்.

மன்னிக்கும் மனம் நமது உடலில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். மன அழுத்தத்தை குறைக்கும். இதுவே காரணமாம்.

இந்தியா மதங்களின் நாடு. மதங்கள் எல்லாமே மன்னிப்பைப் பேசுகின்றன.

`ஒரு மனிதன் தேவ நிலையை அடையவேண்டுமெனில் மன்னிப்பும் அவனிடம் இருக்க வேண்டும்' என்கிறது பகவத் கீதை.

இஸ்லாம் கடவுளை 'அல் கபிர்' என்கிறது, முழுமையாய் மன்னிப்பவர் என்பது அதன் அர்த்தம்.

'மன்னிக்க மறுப்பவர்கள் சுவர்க்கம் செல்ல முடியாது' என்கிறது கிறிஸ்தவம்.

ஆனால் மதங்களைப் பின்பற்றும் நமது நாட்டில் மன்னிப்பு எவ்வளவு தூரம் ஆரோக்கியமாக இருக்கிறது?

நாட்டில் நடைபெறும் இன்றைய நிகழ்வுகளை மீடியாக்களில் பார்த்தாலே உண்மைத்தன்‍ையை தெரிந்துகொள்ள முடியும்..

மன்னிப்பு சட்ட திட்டங்களால் வருவதில்லை.

மன்னிக்கும் மனதுடைய மக்களுடன் பழகும் போது நம்மை அறியாமலேயே அந்த நல்ல பழக்கமும் நம்முடன் வந்து ஒட்டிக் கொள்கிறது.

மன்னிக்கும் மனநிலை பெற்றோருக்கு இருந்தால் பெற்றோர்களைப் பார்த்து வளரும் குழந்தைகள் மன்னிக்கும் மனநிலையை எளிதாகவே பெற்று விடுவார்கள்.

குழந்தைகளுக்கு மன்னிக்கும் மனம் இயல்பாகும்போது எதிர்கால சமூகம் வன்முறைகளின் வேர்களை அறுத்துவிடும்.

அடுத்தவர்களுடைய மனநிலையில் இருந்து கொண்டு நமக்கு நேர்ந்த கசப்பான நிகழ்வை யோசித்துப் பார்த்தால், பெரும்பாலான கோபங்கள் விலகிவிடும்.

குறிப்பாக கணவன் மனைவி, குடும்பத்தினருக்கு இடையேயான பிணக்குகள், எரிச்சல்கள், வெறுப்புகள் போன்றவையெல்லாம் கதிரவன் கண்ட பனிபோல விலகிவிடும்.

பலவேளைகளில் நாம் கோபத்தை விட்டு விட ரொம்பவே தயங்குகிறோம்.

கோபம் என்பது வீரத்தின் அடையாளம் என்று போலியாக கற்பனை செய்து கொள்கிறோம்.

எதிர் நபர் மன்னிப்புக்குத் தகுதியற்றவர் என்று முடிவு கட்டி விடுகிறோம்.

அப்படி நினைப்பதன் மூலம் நாம் பெரியவர்களாக முயலும் உளவியல் சிக்கலே இது.

மன்னிப்பு கடந்த காலத்தின் நிகழ்வுகளை மாற்றாது.

ஆனால் அது எதிர்காலத்தின் பாதைகளில் ஆனந்தமான பூக்களைச் சொரியும்.

வாழ்க்கை பணத்தினாலோ, செல்வத்தினாலோ கட்டப்படுவதல்ல. அது அன்பின் இழைகளால் பின்னப்படுவது.

உண்மையான அன்பு இருக்கும் இடத்தில் மன்னிக்கும் மனம் தானே முளைவிடும்.

மன்னிப்புக் கேட்கும் எவருக்கும், மன்னிப்பை மறுக்காதீர்கள்.

மன்னிப்புக் கேட்காதவர்களையும் மன்னிக்க மறக்காதீர்கள்.....

"மன்னித்து மகான் ஆகுங்கள்"

பணத்தின் அருமையை உணர்வது , உணர்த்துவது எப்படி?

பணத்தின் அருமையை உணர்வது ,  உணர்த்துவது எப்படி?

ஒவவொரு தாய், தந்தையும் தவறாமல் படிக்க வேண்டிய ஒன்று

ஒரு பணக்கார தந்தைக்கு ஒரே கவலை. தன் மகன் சுயமாக பணம்.  சம்பாதிக்கும் வயது வந்தும் இன்னும் அதற்கான முயற்சிகள் எதுவும் எடுக்காமல் ஊதாரித்தனமாக ஊர் சுற்றிக் கொண்டிருப்பதை எண்ணி எப்போதும் வருத்தப்பட்டார்.

ஒரு நாள் பொறுக்கமாட்டாமல் தினம் நூறு ரூபாய் சம்பாதித்துக் கொண்டு வந்தால்தான் இனி வீட்டில் தங்க முடியும் என்று கண்டித்தார்.

மறுநாள் வீட்டிற்குள் நுழையும்போது பையன் நூறு ரூபாய் எடுத்து நீட்டினான். அவனுடைய அப்பா அங்கே எரிந்து கொண்டிருந்த விளக்கில் காட்டி பணத்தை எரிய விட்டார். போய் சாப்பிடு என்றார்

மறுநாளும் உள்ளே நுழையும்போது அவன் கொடுத்த நூறு ரூபாயை விளக்கில் எரியவிட்டார். மூன்றாவது நாள் பணத்தை விளக்கில் காட்டி எரிய விடும் போது மகன் தாவி அதை அணைத்தான். அப்பா என்ன செய்கிறீர்கள் என்று அலறினான்.

அவர் சொன்னார், ‘இன்றுதான் உண்மையில் நீ உழைத்து சம்பாதித்து பணம் கொண்டு வந்திருக்கிறாய்’ ஆச்சரியமடைந்த அவன் எப்படி கண்டு பிடித்தீர்கள் என்றான்.

நீ உழைத்து சம்பாதிக்காத பணம் என்பதால் அது கரியானபோது நீ கவலைப் படவில்லை அதுவே உன் உழைப்பு என்கிறபோது நீ துடித்துவிட்டாய். போய் சாப்பிடு. உழைப்பின் அருமையும் பணத்தின் அருமையும் தெரிந்ததால் இன்று நீ சாப்பிடுகிற சாப்பாடு கூடுதல் சுவையாக இருக்கும்’ என்றார் மலர்ந்த முகத்தோடு.

இன்றைய நம் குழந்தைகள் பலரின் நிலைமையும் இதுதான். உலகின் எந்த மூலையில் கார் வெளியானாலும் அந்த நொடியே குழந்தைகள் அதைப் பற்றி பேசுகிறார்கள். புள்ளி விபரங்கள் தருகிறார்கள். ப்ளஸ் மைனஸ் சொல்கிறார்கள்.

விற்பனைக்கே வராத செல்போன்கள் பற்றி விலை உட்பட எல்லா விபரங்களையும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். எளிமையாக சொல்வ தென்றால் செலவு செய்வதற்கான வழிகள் தெரிந்த அளவிற்கு வருமானத்திற்கான வழிகள் நம் குழந்தைகளுக்கு தெரியவில்லை.

ஆயிரம் ரூபாய் தாளைக் கையில் கொடுத்து இதை செலவழிக்க 20 வழிகளை எழுதச் சொல்லுங்கள். இப்பொழுது அதை சம்பாதிக்கும் வழிகளை எழுதச்சொல்லுங்கள். வேலை பார்த்து சம்பாதிக்கலாம். பிஸினஸ் செய்து சம்பாதிக்கலாம் என்று பொதுவாக இல்லாமல் எப்படிப்பட்ட வேலை பார்த்து என்று விரிவாக எழுதச் சொல்லுங்கள்.

ஏனெனில் சம்பாதிக்கத் தெரியாதவனுக்கு செலவு செய்யவும் தெரியாது. இப்படியெல்லாம் சொல்வதன் நோக்கம் இப்போதே அவர்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதல்ல. ஆனால் அதற்கான ஆற்றலை இப்போதிலிருந்தே வளர்த்துக்கொள்ள வேண்டும்.

போட்டியில் ஜெயித்தால்தான் கோப்பை கிடைக்கும் என்றால்தான் வேடிக்கை பார்க்கும் குழந்தைகள் நாளை நாமும் பயிற்சி எடுத்துக் கொண்டு ஓட வேண்டும் என்று நினைப்பார்கள்.

குழந்தை கோப்பை கேட்கிறதே என்று நாம் கடையிலிருந்து வாங்கிக் கொடுத்துவிட்டால் ஒரு விளையாட்டு வீரன் உருவாகாமல் தடுத்து விட்டோம் என்று அர்த்தம்.

படிப்பை பற்றி தினமும் பேசுகிறோம். வாழ்க்கையின ஆதாரமான பணத்தை பற்றி மாதம் ஒரு முறையாவது பேசுகிறோமா ? பணம் எவ்வாறு சம்பாதிக்கப்படுகிறது? எவ்வாறு சேமிக்கப் படுகிறது? எவ்வாறு வளர்கிறது? என்று விவாதித்திருக்கிறீர்களா ?

இதையெல்லாம் ஒருமுறை சொல்வதால் மட்டும் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. பொறுப்புணர்வுடனும் பொறுமை உணர்வுடனும் அன்றாட நடவடிக்கைகளோடு இணைத்து இவற்றை கற்றுத்தர வேண்டும். அப்பா சம்பாதிப்பதே தான் செலவு செய்யத்தான் என்றுதான் பல குழந்தைகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதை மாற்ற சில எளிய டிப்ஸ்கள் :

100 ரூபாய் கேட்டால் இது ஒரு தொகையே அல்ல என்று ரீதியில் அலட்சியமாக எடுத்து நீட்டாதீர்கள். மாறாக 100 ரூபாயா எதற்கு என்று கேட்டுவிட்டு யோசித்துவிட்டு கொடுங்கள்.

கேட்டபொதெல்லாம் தூக்கி நீட்டாதீர்கள். பணம் இருக்கு. ஆனால் அது வேறு ஒருவருக்கு கொடுக்க வேண்டியது. உனக்கு இரண்டு நாளில் தருகிறேன் என்று சொல்லுங்கள். காத்திருக்க பழக்குங்கள்.

பணத்தை வீட்டிற்குள் கண் கண்ட இடத்தில் எல்லாம் வைக்காதீர்கள். சட்டைப் பையில் வைத்து அப்படியே தொங்க விடாதீர்கள். பீரோவில்தான் பணம் வைப்பீர்கள் என்றால் வீட்டிற்குள் வந்ததும் அதில் வைத்து பூட்டுங்கள். பணத்தை மதிக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்தை நம் குழந்தைகளிடம் ஏற்படுத்த இதெல்லாம் உதவும்.

உங்கள் வீட்டில் உள்ள தொகைக்கு அல்லது பர்ஸில் உள்ள தொகைக்கு எப்போதும் கணக்கு வைத்திருங்கள். கணக்கில்லை என்றால் (யார் எடுத்தாலும் தெரியாது. இதன்மூலம் யாரோ தைரியமாக தப்பு செய்யத் தூண்டுகிறீர்கள் என்று அர்த்தம்) உங்களுக்கே பணத்தின் அருமை தெரியவில்லை என்று அர்த்தம்.

காசோட அருமை தெரிஞ்சவங்கதான் நாங்கெல்லாம் என்றெல்லாம் பேசாதீர்கள். இதெல்லாம் அவர்களுக்கு உண்மையில் புரிவதில்லை. ஆதரவற்றோர் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், அநாதை இல்லங்கள் உடல் ஊனமுற்றோர் இல்லங்களுக்கெல்லாம் அழைத்துச் செல்லுங்கள். நல்ல சாப்பாடு என்பது யாராவது கொடுக்கும் நன்கொடையில்தான் என்பதை புரிய வையுங்கள். பணத்தின் அருமையை நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.

உங்கள் குழந்தையின் அறையில் பெரிய கவர் ஒன்றை தொங்கவிடுங்கள். அன்றாடம் அவர்கள் செலவு செய்த தொகைக்கான கணக்கு மற்றும் பில்களை அதில் சேகரிக்கச் சொல்லுங்கள்.

மாதம் ஒருமுறை கணக்கு பாருங்கள். தினமும் பத்து ரூபாய்க்கு ஸ்நாக்ஸ் வாங்குவது பெரிதாகத் தெரியாது. ஆனால் மாதம் 300 ருபாய் ஸ்நாக்ஸுக்கே செலவு செய்திருக்கிறோம் என்கிற போது குழந்தைகள் தங்கள் செலவுகளை சீரமைக்க இது ஒரு வாய்ப்பாக அமையும்.

தேவையில்லாததையெல்லாம் வாங்குகிறவன் தேவையானதை விற்க வேண்டிவரும் என்ற பாடத்தை அமெரிக்கா உலகத்திற்கே தன்னுடைய பொருளாதார சரிவின் மூலம் கற்றுக் கொடுத்துவிட்டது.

தொட்டதெற்கெல்லாம் அமெரிக்காவை பாரு என்று சொன்னவர்களுக்கும் கூட இந்தியாவைப் பாரு என்ற பாடத்தையும் கூடவே கற்றுக் கொடுத்திருக்கிறது.

எனவே எதை வாங்குவது? எப்படி வாங்குவது? எப்போது வாங்குவது? இதெல்லாம் பணத்தின் அருமையை குழந்தைகளுக்கு கற்றுத்தர நாம் கட்டாயம் சொல்லித்தர வேண்டிய பால பாடங்கள்.

எப்படித்தான் பணத்தின் அருமையை ஏற்படுத்துவது? 100 ரூபாய் விலையில் ஒரு பொருளை குழந்தை கேட்கிறதென்றால் உடனே வாங்கிக் கொடுத்துவிடாதீர்கள்.
அதற்கு பதில் தினம் ஒரு ரூபாய் கொடுங்கள். அதை சேர்த்துக்கொண்டே வந்து 100 வது நாளில் அதை வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவுறுத்துங்கள். (கேட்கிற பொருளின் முக்கியத்துவத்தையும் அவசரத்தையும் பொறுத்து தினம் 5 ரூபாய் அல்லது 10 ரூபாய் என்று அதிகரிக்கலாம்).

இதனால் என்ன என்ன பயன்? தினம் கிடைக்கிற அந்த ரூபாயை வேறு எதற்கும் செலவழித்து விடாமல் சேர்த்து வைப்பதால் மன உறுதி, சுயக்கட்டுப்பாடு வளரும். பொருளை வாங்க காத்திருந்த நாட்கள் அந்த பொருளின் மதிப்பை உணர்த்திக்கொண்டே இருக்கும்.

நலமுடன் வாழ ! ! !

1. தினமும் 10லிருந்து 30 நிமிடங்கள் நடந்து செல்லுங்கள். அவ்வாறு செல்லும் போது சிரித்த முகமாகச் செல்லுங்கள்.

2. தினமும் ஒரு 10 நிமிடங்களாவது, எந்தச் சிந்தனைகளும் இல்லாமல் அமைதியாக அமருங்கள்.

3. தினமும் ஏழு மணி நேரம் உறங்குங்கள்.

4. எப்போதும் இரக்கம், உற்சாகம், ஊக்கம், கருணை ஆகிய குணங்கள் மனத்தில் நிறைந்திருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.

5. நிறைய விளையாடுங்கள்; நன்றாக விளையாடுங்கள்.

6. கடந்த ஆண்டில் படித்ததை விட இன்னும் அதிகமான புத்தகங்களை இந்த ஆண்டு படியுங்கள்.

7. உங்கள் தினசரி அலுவலில் தியானம், யோகம், வழிபாடு போன்றவற்றிற்கு இடம் கொடுங்கள். இவை உங்கள் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குப் புத்துணர்ச்சி அளிக்கும்.

8. உங்கள் ஓய்வு நேரத்தை 70 வயது கடந்த முதியவர்களுடனும், ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளுடனும் செலவழியுங்கள்.

9. நிறைய கனவு காணுங்கள், விழித்திருக்கும் போது!

10. மரங்களிலும்,செடி கொடிகளிலும் விளையும் உணவுப்பொருட்களை நிறைய உண்ணுங்கள். ஆனால், இவை மூலம் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களைக் குறைவாக உண்ணுங்கள்.

11. தினசரி மூன்று நபர்களையாவது மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

12. தினமும் நிறைய தண்ணீர் அருந்துங்கள்.

13. உங்களுடைய உன்னதமான ஆற்றலைத் தேவையற்ற வம்புகளில் இழக்காதீர்கள்.

14. உங்கள் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவற்றைப் பற்றி யோசிக்காதீர்கள்.

15. எதிர்மறையான எண்ணங்களைக் கைவிட்டு, ஆக்கபூர்வமான நிகழ்காலத்தில் வாழுங்கள்.

16. 'வாழ்க்கை என்ற பள்ளிக்கூடத்தில் நாம் அனைவரும் மாணவர்கள். பிரச்சினைகள் என்பது நம்முடைய பாடத்தின் ஒரு பகுதி. அல்ஜீப்ரா வகுப்பு போல அது மாறிவிடும். ஆனால் நம்முடைய படிப்பனுபவம் வாழ்வின் இறுதி வரை வரும்' என்று உணர்ந்து கொள்ளுங்கள்.

17. உங்களின் காலை உணவை ஓர் அரசன் போல அருந்துங்கள்; மதிய உணவை ஓர் இளவரசன் போல உண்ணுங்கள்; இரவு உணவை ஒரு பிச்சைக்காரன் போல உண்ணுங்கள்.

18. நன்றாக வாய்விட்டு சிரியுங்கள்.

19. உலகில் வாழப்போகும் குறுகிய கால வாழ்க்கையில் எவரையும் வெறுக்காமல், எல்லோரிடமும் அன்பு கொண்டு வாழுங்கள்.

20. வாழ்க்கையைச் சிக்கலான நிலையாகக் கொள்ளாதீர்கள். 'ஈஸி'யாக எடுத்துக் கொள்ளுங்கள்.

21. எல்லா விவாதங்களிலும் நீங்கள்தான் வெற்றி பெற வேண்டும் என்று எண்ணாதீர்கள். முரண்பாடுகளையும் மௌனமாய் ஏற்றுக் கொள்ளுங்கள்.

22. கடந்தகால வாழ்க்கையுடன் சமாதானமாகப் போய் விடுங்கள். இதனால் நிகழ்கால வாழ்க்கை அமைதியாக இருக்கும்.

23. மற்றவர்களின் வாழ்க்கை நிலையை, உங்களுடனோ அல்லது உங்கள் வாழ்க்கைத் துணையுடனோ ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். அவர்களுடைய வாழ்க்கைப் பயணம் பற்றி நமக்கு எதுவும் தெரியாது.

24. உங்களுடைய மகிழ்ச்சிக்கும், மன அமைதிக்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பு என்பதை உணருங்கள்.

25. எவரையும், எதற்காகவும், எந்த சந்தர்ப்பத்திலும் மன்னிக்கத் தயாராக இருங்கள்.

26. ‘உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்’ என்று யோசிப்பது உங்கள் வேலை இல்லை என்று உணருங்கள்.

27. கடவுள் அனைத்தையும் ஆற்றுபவன் என்று மனதார உணருங்கள்.

28. நல்லதோ கெடுதலோ, எல்லாமே கடந்து போய்விடும் என்று நம்புங்கள்.

29. உங்களுடைய துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்பவர்கள் உங்கள் நண்பர்கள். எனவே அவர்களோடு நிரந்தரமாகத் தொடர்பு வைத்திருங்கள்.

30. பயனில்லாத, அழகில்லாத, மகிழ்ச்சியளிக்காதவைகளில் இருந்து வெளியே வந்து விடுங்கள்.

31. உங்கள் தகுதிக்குத் தேவையான அனைத்தும் உங்களிடம் இருப்பதால் பிறரைப் பார்த்து பொறாமைப்படுவதைத் தவிர்த்து விடுங்கள்.

32. வாழ்வின் 'உன்னதம்' என்பது இன்னும் வரவில்லை. நிச்சயம் வந்து விடும் என்று நம்புங்கள்.

33. நீங்கள் எந்த மனநிலையில் இருந்தாலும் நன்றாகக் குளித்து, சுத்தமான ஆடையை அணிந்து கொள்ளுங்கள்.

34. எல்லோராலும் அங்கீகரிக்கப்படும் செயல்களையே செய்யுங்கள்.

35. எத்தனை 'பிஸி'யாக இருந்தாலும் குடும்பத்தினருடன் பேசி மகிழுங்கள்.

36. உங்களுக்கு உள்ளே இருக்கும் 'ஆன்மா' எப்போதும் ஆனந்தமாக இருப்பதை உணர்ந்து, நீங்களும் ஆனந்தமாக இருங்கள்.

37. தினசரி மற்றவருக்குப் பயனளிக்கும் வகையில் ஒரு செயலைச் செய்யுங்கள்.

38. உங்களுடைய வரம்பை அறிந்து எந்தச் செயலையும் செய்யுங்கள். அளவுக்கு மீறினால் அம்சமும் இம்சைதான்!

39. நீங்கள் காலையில் கண் விழித்தவுடன் உயிருடன் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி தெரிவியுங்கள்!

யார் ஏழை ❓❓❓

யார் ஏழை  ❓❓❓

🔰ஒரு பணக்கார அம்மா துணி கடைக்குப் போய்_கடைக்காரரிடம் எனது மகனுக்கு திருமணம்' ஆகவே எனது வீட்டில் வேலைசெய்யும் பணிப்பெண்ணிற்கு கொடுக்க மிக குறைந்த விலையில் ஒரு சேலை கொடுங்கள் என்று வாங்கிச் செல்கிறார்..❗

🔰சற்று நேரத்திற்கு பிறகு அதே கடைக்கு அந்த வீட்டு பணிப்பெண் வருகிறார் கடைக்காரரிடம் என் முதலாலியின் பையனுக்கு கல்யாணம் அதனால் எனது முதலாளி அம்மாவுக்கு பரிசாக கொடுப்பதற்கு உங்க கடையில் மிக உயர்ந்த விலையுடைய சேலைகளை எடுத்துப்போடுங்கள் என்று பார்த்து மிக உயர்ந்த விலையுடைய ஒரு சேலையை வாங்கிச் செல்கிறார்..❗

♻இதில் யார்_பணக்காரர்...❓❗

🔰3'ஸ்டார் 🏬ஹோட்டலில் தங்கி இருக்கும் சுற்றுலாவிற்கு வந்த ஒரு பணக்காரவீட்டு 6 மாத குழந்தையின் அம்மா, 🏬ஹோட்டல் மேலாளரிடம் குழந்தைக்கு ஒரு கப் பால் 🍼வேண்டும் என்று கேட்கிறார்,

அதற்கு அந்த மேலாளர் 🍼பாலுக்கு நீங்கள் தணியாக 💶பணம் செலுத்த வேண்டும் என்று கூற, பணக்கார அம்மாவும் 💶பணத்தை செலுத்தி 🍼பாலை வாங்கி குழந்தைக்கு ஊட்டுகிறார்...❗

🔰ஒருநாள் சுற்றிப் பார்த்தவிட்டு 🏬ஹோட்டலுக்கு திரும்பும் வழியில் குழந்தை பசியால் அழுததால், ரோட்டின் ஓரத்தில் இருந்த டீ கடையில் ஒரு கப் 🍼பால் வாங்கி குழந்தைக்கு ஊட்டினார் பிறகு 🍼பால் எவ்வளவு என்று டீ கடைக்காரரிடம் கேட்க, டீ கடைக்கார பெரியவர் குழந்தைக்கு கொடுக்கும் பாலுக்கு நாங்கள் 💶காசு வாங்குவதில்லை எனறு சிரித்த முகத்தோடு பதில் அளித்தார்...❗

பணம்💶 உள்ளவர் எல்லாம் பணக்காரர் அல்ல ......❗❗
அதை கொடுக்க நினைப்பனே உண்மையான பணக்காரன்....❗❗

இந்த உலகத்தில் நிறைய நல்ல மனிதர்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்கள் ,.....

நம் 👀கண்களுக்கு தென்படவில்லை என்றாலும் பரவாயில்லை நாம் அவர்களில் ஒருவராக இருக்க முயற்சி செய்வோம்.....❗❗

தொடக்கம் நாமாக இருப்போமே...❗❗

பொதுநலம் என்பது புல்லாங்குழல் போன்றது. சுயநலம் என்பது ⚽கால்பந்து போன்றது. இவை இரண்டுமே காற்றால் இயங்குகின்றன.ஆனால் ஒன்று முத்தமிடப்படுகின்றது. மற்றொன்று உதைக்கப் படுகின்றது. தான் வாங்கிய காற்றை சுயமாக வைத்துக் கொள்வதால் கால்பந்து உதை படுகிறது. ஆனால் தான் வாங்கிய காற்றை இசையாக புல்லாங்குழல் தருவதால் அது முத்தமிடப் படுகிறது.

சுயநலம் உள்ள மனிதன் புறக்கனிக்கப் படுவான். பொதுநலம் உள்ளவன் போற்றப் படுவான்.
👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽👇🏽

பிடித்திருந்தால் நீங்களும் உங்கள் நண்பர்களுக்கு பகிரலாம்.🌠👌🏽உண்மையில்நல்லசெய்தி👍பகிரலாம்பணக்காரர்கள் மனம்மாற.🙏🏾

மன முதிர்ச்சி என்றால் என்ன? *What is Maturity of Mind ? *

மன முதிர்ச்சி என்றால் என்ன?

 *What is Maturity of Mind ? *

1. மற்றவர்களை திருத்துவதை விட்டுவிட்டு நம்மை திருத்திக்கொள்வது.
1. Correcting ourselves without trying to correct others.

2. அனைவரையும் அப்படியே (குறைகளுடன்) ஏற்றுக்கொள்வது.
2. Accepting others with their short comings.

3. மற்றவர்களின் கருத்துக்களை அவர்கள் கோணத்திலிருந்து புரிந்துகொள்ளுதல்.
3. Understanding the opinions of others from their perspectives.

4. எதை விட வேண்டுமோ அதை விட பழகிகொள்தல்.
4. Learning to leave what are to be avoided.

5. மற்றவர்களிடமிருந்து எதிர்பார்ப்பதை விடுதல்.
5. Leaving the expectations from others.

6. செய்வதை மன அமைதியுடன் செய்வது.
6. Doing whatever we do with peace of mind.

7. நம் புத்திசாலித்தனத்தை மற்றவர்களிடம் நிரூபிப்பதை விடுவது.
7. Avoiding to prove our intelligence on others.

8. நம் செயல்களை மற்றவர் ஏற்க வேண்டும் என்ற நிலையை விடுதல்.
8. Avoiding the status that others should accept our actions.

9. மற்றவர்களுடன் நம்மை ஒப்பிடுவதை விடுதல்.
9. Avoiding the comparisons of ourselves with others.

10. எதற்குமே சஞ்சலப்படாமல் மனதை அமைதியாக வைத்துக்கொள்ள முயற்சித்தல்..
10. Trying to keep our peace in our mind without worrying for anything.

11. நம் அடிப்படை தேவைக்கும், நாம் அடைய விரும்புவற்றிற்கும் உள்ள வேறுபாட்டினை உணர்தல்.
11. Understanding the difference between the basic needs and what we want.

12. சந்தோசம் என்பது பொருள் சம்பந்தப்பட்டது அல்ல என்ற நிலையை அடைதல்.
12. Reaching the status that happiness is not connected with material things.

இந்த 12 ல் குறைந்தது ஒரு ஏழெட்டையாவது கடைபிடிக்க முயற்சித்தால் வாழ்க்கை எளிதாகிவிடும்
Our life will be simple if only we practice 7 or 8 of the above 12

Live your Life & Love your Life.

புத்திசாலித்தனம் நமக்கு மட்டுமே சொந்தமில்லை

ஒருவரை நீண்ட நாட்களாக காணவில்லை. அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கருதிய போலீஸார், சந்தேகத்தின் பேரில் ஒருவரைக் கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்தினர். வழக்கு விசாரணைக்கு வந்தது.

குற்றம் சாட்டப்பட்டவரின் வக்கீல் எழுந்து, “மைலார்ட்! இவர் யாரைக் கொலை செய்தார் என்று குற்றம் சாட்டப்பட்டதோ, அவரே இன்னும் ஐந்து நிமிடத்தில் இதே நீதிமன்றத்தின் கதவு வழியே உள்ளே வரப் போகிறார்.

நீங்கள் அதைப் பார்த்த பின்பு, இவர் குற்றமற்றவர் என்பதை உணர்வீர்கள்” என்று கூறி அமர்ந்துவிட்டார்.

நீதிபதி உட்பட எல்லோரும் நீதிமன்றக் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். 5 நிமிடம், 10 நிமிடம் கழிந்தது. ஒருவரும் வரவேயில்லை. இப்போது வழக்கறிஞர் எழுந்தார்.

“மைலார்ட்! நீங்கள் உட்பட யாருமே காணாமல் போனவர், கொலைதான் செய்யப்பட்டவர் என்பதை முழுமையாக நம்பவில்லை. அதனால்தான் எல்லோரும் வாசலையே பார்த்துக் கொண்டிருந்தீர்கள்.

எனவே, உங்களுக்கு இருக்கும் சந்தேகத்தின் பலனை குற்றம் சாட்டப்பட்டவருக்கு அளித்து, அவரை விடுதலை செய்ய வேண்டும்” என்று கூறிவிட்டு கம்பீரமாக அமர்ந்தார்.

பிற்பகலில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். குற்றவாளிக்கு மரண தண்டனை அளித்தார். வக்கீல் எழுந்து, “எப்படி மைலார்ட்?” என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி சொன்னார், “அந்த பத்து நிமிடமும் நான் வாசலைப் பார்த்தது உண்மைதான். ஆனால், ஒருதடவை கூட குற்றம் சாட்டப்பட்டவர்  வாசலைப் பார்க்கவில்லை.”

"புத்திசாலித்தனம் நமக்கு மட்டுமே சொந்தமில்லை"

ஆயிரம் கோடி செல்வம் இருந்தாலும், சொந்த பந்தமும் , நல்ல நட்புமுமே கடைசி வரையில் நம்முடன் இருக்கும்.!

ஒரு குட்டிக் கதை!
------------------------------
🐀எலி
ஒன்று
வைர 
வியாபாரி
வீட்டிலிருந்து
ஒரு
வைரத்தை
விழுங்கிவிட்டது..
*
மிகவும்
விலை
உயர்ந்த
வைரம்
அது.
*
வியாபாரி
எலி
பிடிப்பவனைப்
பார்த்து,
எப்படியாவது
அந்த
🐀எலியை
"ஷூட்"🔫
செய்து,
*
வயிற்றில்
இருக்கும்
வைரத்தை
எடுக்க
உதவ
வேண்டும்
எனக்
கேட்டுக்
கொண்டார்!
*
🐀எலி
பிடிப்பவனும்
தன்
துப்பாக்கி’யுடன்🔫
வந்துவிட்டான்!
*
அதை
ஷூட்
செய்ய,
*
எலி
அங்கே
இங்கே
என்று
🐀போக்குக்
காட்டி
ஓடியதில் ,
*
திடீரென்று
ஆயிரக்கணக்கான
சக
எலிகள்
ஒன்று
கூடிவிட்டன..
*
ஆயிரக்கணக்கான
எலிகளுக்கிடையேயும்
அந்த
வைரம்
முழுங்கிய
எலி
மட்டும்,
*
அந்த
எலிக்கூட்டத்தோடு
சேராமல்,
ஒதுங்கி தனித்தே
நின்றிருந்தது .
*
எலி
பிடிப்பவனுக்கு
அது
வசதியாக
போய்விட்டது!
*
சரியாகக்
குறி
பார்த்து,
அந்த
எலியை
டுமீல்..
என
சுட்டான்..
எலி
spot out..🐁
*
வைர
வியாபாரி
சந்தோஷமாக
அந்த
எலியின்
வயிற்றைக்
கிழித்து,
வைரத்தை
எடுத்துக்கொண்டான்!
*
ஆனால்,
ஒரு
கேள்வியை
எலி
பிடிப்பவனைப்
பார்த்து
வைர
வியாபாரி
கேட்டான்..
*
ஆமா...!
அந்த
எலி
மாத்திரம்,
மற்ற
எலிகளோடு
சேராமல்
தனியே
தனித்தே
இருந்ததே!
*
நீயும்
அதைச்
சரியாக
அடையாளம்
கண்டு,
சுட்டுவிட்டாய்..
என்ன
காரணம்?
என்றான்.
*
அந்த
எலி
பிடிப்பவன்
பதில்
சொன்னான்...
*
இப்படித்தான்...
பலபேர்,
திடீர்
பணக்காரர்கள்
ஆனதும்,
மற்றவர்களை
விட
நாம்
உயர்ந்தவர்
என்ற
எண்ணம் 
கொண்டு,
*
மற்றவர்களுடன்
தன்னைச்
சேர்க்காமல், 
தூரத்தில்
வைத்துக்
கொள்வார்கள்"
*
அதுவே..
ஆபத்தில்,
அவர்களுக்கு
உதவாமல்
போய்விடுகிறது.
என்றான்.
*
உறவுகளும்
அப்படித்தான்!
சிலர்
இடையில்
வந்து
அழிந்து
போகும்
செல்வத்தை
நம்பி,
*
உறவுகளை
அசட்டை
செய்து,
விட்டு
விடுகிறார்கள்.
*
ஆயிரம்
கோடி
செல்வம்
இருந்தாலும்,
சொந்த
பந்தமும் ,
நல்ல
நட்புமுமே
கடைசி
வரையில்
நம்முடன்
இருக்கும்.!
👨‍👨‍👧‍👧👨‍👨‍👧‍👧
*
நன்றி,வாட்ஸ் ஆப்பில் வந்தது!

கற்றலினால் ஆன பயன்தான் என்ன ??

#கற்றலினால் ஆன பயன்தான் என்ன ?? 😎👇

ஒரு புலியை நேருக்கு நேராய் சந்திக்கும்பொழுது எப்படி தப்பிப்பது என்று ஒரு கல்வியும் நமக்குக் கற்றுக் கொடுக்கவில்லையே..

26.09.2014 இல் டெல்லி உயிரியல் பூங்காவில் ஒரு வெண்மை நிற புலி இளைஞனை கொன்றது.

கற்றலினால் ஆன பயன் என்ன?

ஒரு உயிர் ஒரு புலியிடம் மாட்டிக் கொண்டு 10 நிமிடங்களாக கையெடுத்துக் கும்பிட்டுக் கொண்டேயிருக்கும் பொழுது அந்த உயிரை எப்படிக் காப்பாற்றுவது என்பதை பார்வயாளர்கள் யாருக்கும் நம் கல்வி முறை நமக்கு  கற்றுக்கொடுக்கவேயில்லையே..

ஆனால் பார்வையாளர்கள் மேலிருந்து கல்லெறிந்த உடன்..அது சினம் கொள்கிறது. மேலே பார்த்து உறுமுகிறது.

பார்வையாளர்கள் விடவில்லை. தொடர்ந்து கல்லெறிகிறார்கள்..
 கூச்சலிடுகிறார்கள்...

அதன்பிறகுதான் அந்தப் புலி, அந்த வாலிபனைத் தாக்க முயற்சிக்கிறது. அதுவும் இறையைத் தூக்கிக் கொண்டு தன்னிடத்திற்கு தூக்கிக் கொண்டு சென்று விட வேண்டும் என முடிவு செய்து அவனுடைய கழுத்தைக் கவ்விப் பிடிக்கிறது.

இவையெல்லாமே தவிர்க்கப்பட்டிருக்கலாம்.

காரணம்..அறிவின்மை..

என்ன செய்வது என்கிற அறிவின்மை.

மிருகங்கள் சப்தத்திற்கு மிரளும். ஆனால் நெருப்பிற்கு பயப்படும்.

கூடியிருந்த அத்தனை பார்வையாளர்களில் யாராவது ஒருவர், தன் சட்டையைக் கழற்றி, அதில் நெருப்பு வைத்து, அதை அந்த வாலிபனிடத்தில் எறிந்திருந்தால் புலி மிரண்டு ஓடியிருந்திருக்கும்.

இந்த அறிவைக் கூட கற்றுக் கொடுக்காமல்..

(a+b)2 =a2 + 2ab + b2

என்று கற்றுக் கொண்ட வெற்றுத் தேற்றத்தினால் எனக்கு என்ன பயன்?

ஒரு விலங்கு தன்னைத் தாக்க வரும் பொழுது, வேறு எந்த உதவியுமே தனக்கு அந்த இடத்தில் கிடைக்கவில்லை.. தப்பித்து ஓடவும் முடியவில்லை..மிருகமோ தன்னிலும் பலத்த உருவம்..

அது முதலையாக இருக்கலாம்..சிங்கமாக இருக்கலாம்.. அல்லது.. யானையாக இருக்கலாம். அதை எப்படி எதிர்கொள்வது என்ற அறிவைக் கற்றுக் கொடுக்காத கல்வியினால் எனக்கென்ன பயன் ????

அந்த விலங்குகளின் கண்களை நம் கை முஷ்டியினால் பலங்கொண்ட மட்டும் ஓங்கித் தாக்கினால் அவை நிலை குலைந்து ஓடி விடும். நாமும் தப்பிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

அல்லது சிறு மண் துகள்களை அள்ளி அதன் கண்களில் தூவினால் போதும் அவை அந்த இடத்திலிருந்து தப்பித்துச் செல்லத்தான் முயற்சிக்கும்.

இந்த அறிவைக்கூடக் கற்றுக்கொடுக்காமல்.. பட்டங்கள் என்ன.. சட்டங்கள் என்ன.. பல்கலைக் கழகங்கள் என்ன ???

தென்னாப்பிரிக்காவிலும், ஆஸ்திரேலியாவிலும் என்ன தோண்டியெடுக்கிறார்கள் என்பதை கற்றுக்கொடுப்பதை விட.. வாழ்க்கைக் கல்வியை முதலில் கற்றுக் கொடுங்கள்.

மற்றவர்களை மதிப்பது எப்படி..?

 மற்றவா்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்வது எப்படி?

சாலை விதிகள் என்ன?

ஏன் சாலை விதிகளைப் பின்பற்ற வேண்டும்?

 அடிப்படைச் சட்டங்கள் என்ன?

 நமக்கான உரிமைகள் என்ன?

 காவல் நிலையங்களை எப்படி அணுகுவது?

விபத்து ஏற்பட்டால் அதை எப்படி எதிர் கொள்வது?

 விஷக்கடிகளில் எப்படித் தப்பிப்பது?

 மாரடைப்பு வந்தால் என்ன செய்வது?

 நோய்களை எவ்வாறு கண்டறிவது?

எந்த மருந்துக்கள் எல்லாம் தடை செய்யப்பட்டவை..பின் விளைவுகள் உள்ளவை?

மனைவியிடம் எப்படி நடந்து கொள்வது?

 கணவனிடம் எப்படி நடந்து கொள்வது?

 மற்றவர்களை நேசிப்பது எப்படி?

 நேர்மையாய் இருப்பது எப்படி?

இவை எதையுமே கற்றுக் கொடுக்காத கல்வியினால் ஆன பயன் தான் என்ன?

இது எதையுமே தெரிந்து கொள்ளாமல்..

இனித் தெரிந்து கொள்வதற்கும் வாய்ப்பில்லாமல் துடி துடித்து மரித்துப் போன இந்திய இளைஞனே..

ஒரு வெண் புலி, உன் வாழ்க்கையை இருளாக்கிவிட்டது

இந்த பதிவு ரொம்ப பிடித்தது பதிவு செய்து இருக்கேன்.

👍

சாதியென்னும் நாகத்தை தாக்கிதாக்கி, சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு

சேலத்தில் பெரியார் பொதுக்கூட்டம் ஒன்றிக்கு வருவதை அறிந்த அவரது தொண்டர், கூட்டத்திற்கு வரும் வழியில், அவரது செருப்பு அறுந்து விட்டது..

 சாலை ஓரத்தில் இருந்த செருப்பு தயார் செய்யும் தோழரிடம், அய்யா இந்த செருப்பை சரிசெய்து கொடுங்கள் என கேட்டார்.

இதுபோல மரியாதையான வார்த்தைகளை கேட்டறியாத அந்தத் தொழிலாளி, நிமிந்து பார்த்து, கறுப்புச் சட்டைப் பார்த்தவுடன், அய்யா நீங்கள் பெரியாரின் தொண்டரா? என்று கேட்டார்.

இவர் ஆமாம் என்று சொன்னவுடன், நான் பெரியார் அவர்களைப் பற்றி ஒரு கவிதை என் மனதில் உள்ளது. எனக்கு எழுதப்படிக்கத் தெரியாது. இதை அய்யாவிடம் எப்படி சேர்ப்பது? என்றவுடன்

தொண்டர் ஒரு காகிதத்தையும், பேனாவையும் எடுத்து, நீங்கள் சொல்லுங்கள் நான் எழுதுகிறேன் என்று, அவர் சொல்ல எழிதி முடித்தார்.

நீளமான, சிறப்பான அந்தக் கவிதையைக் கண்டு, வியந்துபோன பெரியார் தொண்டர், நீங்கள் என்னுடன் வாருங்கள், நீங்களே மேடையில் இதை வாசியுங்கள் என்று வேண்டினார்.

மேடையில் அவர் வாசிக்கும்போது, தொண்டர் பெரியாரிடம் நடந்த விவரங்களைக் கூறினார்...

கவிதை முடிந்தவுடன், பெரியார் ஒலிபெருக்கி அருகில் சென்று, அய்யா உங்கள் பெயர் என்ன? என்றார். என் பெயர் சொக்கலிங்கம் என்று சொன்னவுடன், பெரியார்,  "புலவர் சொக்கலிங்கம் வாழ்க என்று மூன்று முறை வாழ்த்தினார்.

 கூடியிருந்த பொது மக்களும் ஆரவாரத்துடன் வாழ்த்தினார்கள்..

அதன் பிறகு சேலத்தில் எங்கு தி.க. கூட்டம் போட்டாலும், புலவர் சொக்கலிங்கம் கவிதை வாசிப்பார் என்ற விளம்பரத்துடன்,
நிகழ்ச்சி நடப்பது வழக்கமாக இருந்தது.  

இதைக்கண்ட மேல் சாதியினர், அரிப்பு தாங்காமல், புலவருக்கு வக்கீல் நோடீஸ் அனுப்பினார்கள். படிக்கத்தெரியாத புலவர், கடிதம் கொடுத்த தபால்காரரிடம் படித்துக்காட்டும்படி வேண்டினார்..

சாதிவெறி, மூடநம்பிக்கைக்கு பிறப்பிடமான அந்த தபால்க்காரன்,
படிக்காத நீ எப்படி புலவனானாய் என்று நீதிமன்றத்தில் போய்ச் சொல்லு என்று தனது வயிற்றெரிச்சலைக் கொட்டித்தீர்த்தான்.

அதிர்ந்து போன புலவர், சென்னைக்குச் சென்று அய்யாவை நேரில் சந்தித்தார்..
புலவரைக் கண்டவுடன் அய்யா அவர்கள் எழுந்து வணங்கி, புலவர் சொக்கலிங்கம் எப்படி இருக்கிறீர்கள் என்று அன்புடன் கேட்டார்.

 மூன்றாண்டு ஆகிப்போன விஷயத்தை அய்யா நினைவில் வைத்துள்ளதை எண்ணி வியந்த புலவர், நலமாக இருக்கிறேன் அய்யா என்று அமர்ந்தார்.
அய்யாவிடம் நோட்டீசைக் காட்டியவுடன், அய்யா புலவரிடம், ஏதாவது வக்கீலிடம் போனீர்களா என்று கேட்டார்.

புலவர் யாரிடமும் போகவில்லை என்றார்.
போய்விடாதீர்கள்... போனால் உங்களிடம் உள்ள செருப்பு தைக்க  பயன்படுத்தும் ஊசி, கத்தி வரை எல்லாம் பிடுங்கிக்கொண்டு, பணத்தையும் வாங்கிக்கொண்டு வழக்கைப் பற்றி கவலைப் படமாட்டார்கள்..

ஆகவே நான் சொல்வதைப்போல செய்யுங்கள்.. என்று ஒரு செய்தியை அவரது காதில் சொன்னார்.

இந்த செய்தியை நீதிமன்றத்தில் மட்டும் சொல்லுங்கள்... வேறு யாரிடமும் சொல்லாதீர்கள் என்று மீண்டும் வலியுர்த்தினார்.

வழக்கு விசாரணைக்கு வந்தது. நீதிமன்றம் முழுவதும் அவாள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெரியார் தொண்டர்கள் 70 பேர் புலவருக்கு துணையாக வந்திருந்தார்கள்.

வக்கீல்:  உன் பெயரென்ன?
புலவர் சொக்கலிங்கம்...

வக்கீல்: உன் படிப்பு என்ன.? 
நான் படிக்கவில்லை....

வக்கீல்:  படிக்காத நீ எப்படி புலவரானாய்?
 இது எனக்கு எங்கள் அய்யா கொடுத்த பட்டம்...

வக்கீல்: உங்கள் அய்யா என்ன பல்கலைக் கழகமா?

எங்கள் அய்யா அதைவிட மேலானவர்...

வக்கீல்:  நீ புலவன் என்று போட்டுக் கொண்டது தவறு..
நீ எந்தப் பல்கலைக் கழகத்திலும் படிக்காதவன். குற்றத்தை ஒத்துக்கொள்கிறாயா ?

 நீங்கள் யாரையெல்லாம் புலவர் என்று ஒத்துக் கொள்கிறீர்கள்?

 வக்கீல்:  திருவள்ளுவர், கம்பர் இளங்கோவடிகள் போல பலர், இவர்களை எல்லாம் புலவரென்று நீங்கள் ஏற்றுக் கொண்டால் இவர்கள் எல்லாம் எந்தக் கால்லூரியில் படித்துப் பட்டம் வாங்கினார்கள் என்று கேட்டவுடன்...

 நீதிபதி உள்படஎல்லோரும் கைத்தட்டினார்கள்...
வழக்கு தள்ளுபடியானது.

தொண்டர்கள்  70 பெரும் புலவரைத் தூக்கிக்கொண்டு..
 "புலவர் சொக்கலிங்கம் வாழ்க" 
"புலவர் சொக்கலிங்கம் வாழ்க" 
என்றபடி நீதிமன்றத்தையே அதிரவைத்தார்கள்...

இதைத்தான் கவியரசு கண்ணதாசன்...
" நீதிமன்ற நீதிக்கும், நீதி சொல்வார்..
 நெறிகெட்டு வளைந்ததேல்லாம் நிமிர்த்தி வைப்பார்...

சாதியென்னும் நாகத்தை தாக்கிதாக்கி,
சாகடித்த பெருமை கைத்தடிக்கே உண்டு"
என்று குறுப்பிட்டிருப்பார்..

நன்றி திரு
Sirpi Rajan..

கேன்சர் நோய்

கேன்சர் நோய்

இறைவனின் படைப்பில் கேன்சர் நோயை அழிக்க இன்னொரு மருந்து கண்டுபிடிக்கபட்டு  உள்ளது, அது கொய்யா விதைதான், இது சாபிட்ட 48 மணி நேரத்தில் இருந்து கேன்சர் செல்களை அழிக்கிறது என ஆராய்ச்சியில் தெரிய வந்து உள்ளது, பிறருக்கும் பகிர்வோம் கேன்சர் இல்லா நாடாக மாத்துவோம் 
தயவு செய்து 🙏 அதிகமாக பகிரவும்

நண்பர்களே நம்மால் ஒருவர் பயன்
அடைந்தாலும் அந்த
இறைவனுக்கு🙏🙏 நன்றி சொல்ல
கடமை படுவோம்.........""" frnzz plz pass this msg.........to allllll
பல பேர் பார்க்க👀 வேண்டிய
உபயோகமான🎗 செய்தி,பகிர்ந்து கொள்ளுங்கள்👈👍👍👍👍
ஒருநாள் 👉👉உங்களுக்கே👈👈 உதவ நேரிடலாம்....

📍இதனை அதிகமாக FORWARD செய்து 📍மற்றவர்களுக்கும், விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி.......
📍இதனை FORWARD செய்வதினால் எனக்கென்ன🤔🙄😒 பயன் என்று நினைத்து,🙇 📍இதனை FORWARD செய்யாமல் செல்லும் சகோதரசகோதரிகளே....😌😌😌
📍ஒரு நாள்இது உங்களுக்கும் உதவக்கூடும்என்பதனை📍 மறந்திடவேண்டாம்.

அக்கறையுடன்🔴🔴 📍இதனை FORWARD செய்த, அனைத்து நல்ல உள்ளங்களுக்கும்  நெஞ்சார்ந்த நன்றிகள்.

குட்டிக்கதை.

குட்டிக்கதை.

கால்பந்தின் மீது இருந்த ஆர்வத்தால் மாதவனை அவனது அப்பா மாவட்ட கால்பந்து அணியில் சேர்த்து விட்டார். அவனுக்கு கால்பந்து விளையாட்டில் ஆர்வம் இருந்தாலும் ஒரு வித சோம்பலும் அவனிடம் ஒட்டியிருந்ததால் அவனது அணியில் இருக்கும் சக வீரர்களோடு போட்டியிட்டு அணிக்குள் இடம்பெற முயற்சி செய்யாமலே இருந்தான். களத்தில் இறங்கும் 11 பேரில் ஒருவராக இடம்பெற முயற்சிக்காமல் ரிசர்விலே இருந்து வந்தான்.

சில நேரங்களில் மாதவனின் அப்பா அவனது விளையாட்டை காண மைதானத்துக்கு வருவார். ஆனால் அவன் களத்தில் விளையாடாமல் அணியின் ரிசர்வ் வீரராக இருப்பது கண்டு மிகவும் வருந்துவார்.

அன்று தேசிய அளவில் நடைபெற வேண்டிய போட்டியில் கலந்துகொள்வதற்கான இறுதிப்போட்டியில் கலந்துகொள்ள வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். மாதவன் பயிற்சியாளரிடம் சென்று தன்னையும் களத்தில் விளையாடும் அணியில் சேர்த்துக் கொள்ள கெஞ்சினான்.

"இது இறுதிப் போட்டி. தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு.  இதில் அனுபவம் உள்ள வீரர்களையே களம் இறக்க வேண்டும். அப்போது தான் அணி வெற்றி பெற முடியும்" என்றார் அணியின் பயிற்சியாளர்.

"எனக்கு ஒருமுறை வாய்ப்பு தாருங்கள். அணியின் வெற்றிக்காக உயிரையும் கொடுக்க காத்திருக்கிறேன். உங்கள் நம்பிக்கையை காப்பாற்றுவேன்" என மாதவன் பயிற்சியாளரிடம் மன்றாடினான்.

மாதவனின் செயலைப் பார்த்து பயிற்சியாளருக்கு வியப்பாக இருந்தது. இதுவரை இப்படி எப்போதும் அவன் மன்றாடியதில்லை.
"இது இறுதிப் போட்டி. கவனமுடன் விளையாடு" என ஆடும் 11 வீரர்களில் ஒருவராக சேர்த்துக் கொண்டார்.

மாதவன் ஆட்டத்தில் அனல் பறந்தது. பந்தைக் கொண்டு தனியொருவனாய் சீறிப்பாய்ந்தான். பந்தை லாவகமாக கடத்தி தொடர்சியாக கோல் போட்டான். அணியினர் போட்ட 19 கோல்களில் 17 கோல்கள் மாதவனால் போடப்பட்டது. அவனுடைய அணி இறுதிப் போட்டியில் வெற்றிப்ப்பெற்றது.

இது எப்படி சாத்தியமாயிறு என்று பயிற்சியாளர் கேட்டார்.

" இன்று என் தந்தை எனது ஆட்டத்தைக் காணவந்தார்" என்று கூறினார்.

"வழக்கமாக அவர் அமரும் இடத்தில் இன்று இல்லையே? அவர் எங்கே அமர்ந்திருந்தார்? " என்று பயிற்சியாளர் கேட்டார்.

அதற்கு மாதவன்," நான்கு நாட்களுக்கு முன் என் தந்தை இறந்துவிட்டார். இன்று அவர் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்" என்று கூறினான். அவன் கண்ணில் ஊற்றெடுத்த கண்ணீர் பயிற்சியாளர் கண்களில் அருவியாய் கொட்டியது.

கதையின் நீதி.
மனமாற்றம் ஏற்படும் நொடி எப்போது வேண்டுமானாலும் வரலாம்.
சிலருக்கு மகிழ்ச்சியில்.
சிலருக்கு வேதனையில்.
அந்த நொடியை கண்டுபிடிப்பதில் தான் வாழ்க்கையின் சுவாரசியமே அடங்கியிருக்கிறது.

பால.ரமேஷ்.

அவள் பெயர் ஐடா ஸ்கேடர், அமெரிக்க பெண்மணி. அவளின் அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ஆனால் மிஷனரிகள் அக்காலத்தில் இந்தியர்களின் அடிதட்டு மக்க...